பேசாது நெகிழ வைத்த காக்கா அண்ணா

தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான காக்ககா அண்ணன் முள்ளிவாய்கால் மண்ணில் பேசாது மௌன விரதம் கடைப்பிடித்தமை அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அதேவேளை அவர் அருகே சென்றிருந்த முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டார். முள்ளிவாய்க்காலில் நேற்றையதினம் நடைபெற்ற இன அழிப்பின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே அவர் தனது கையில் வைத்திருந்த சிறிய குறிப்பேட்டி மே18 நவம்பர்27 மௌனவிரதம் என எழுத்தப்பட்டிருந்தது.